1318கஞ்சன் விட்ட வெம் சினத்த
      களிறு அடர்த்த காளை என்றும்
வஞ்சம் மேவி வந்த பேயின்
      உயிரை உண்ட மாயன் என்றும்
செஞ்சொலாளர் நீடு நாங்கைத்
      தேவ-தேவன் என்று என்று ஓதி
பஞ்சி அன்ன மெல் அடியாள்
      பார்த்தன்பள்ளி பாடுவாளே             (2)