1319அண்டர்-கோன் என் ஆனை என்றும்
      ஆயர் மாதர் கொங்கை புல்கு
செண்டன் என்றும் நான்மறைகள்
      தேடி ஓடும் செல்வன் என்றும்
வண்டு உலாவு பொழில் கொள் நாங்கை
      மன்னும் மாயன் என்று என்று ஓதி-
பண்டுபோல் அன்று-என் மடந்தை
      பார்த்தன்பள்ளி பாடுவாளே             (3)