1320கொல்லை ஆனாள் பரிசு அழிந்தாள்-
      கோல் வளையார்-தம் முகப்பே
மல்லை முந்நீர் தட்டு இலங்கை
      கட்டு அழித்த மாயன் என்றும்
செல்வம் மல்கு மறையோர் நாங்கைத்
      தேவ-தேவன் என்று என்று ஓதி
பல் வளையாள் என் மடந்தை
      பார்த்தன்பள்ளி பாடுவாளே             (4)