1321அரக்கர் ஆவி மாள அன்று
      ஆழ் கடல் சூழ் இலங்கை செற்ற
குரக்கரசன் என்றும் கோல
      வில்லி என்றும் மா மதியை
நெருக்கும் மாடம் நீடு நாங்கை
      நின்மலன்-தான் என்று என்று ஓதி
பரக்கழிந்தாள் என் மடந்தை
      பார்த்தன்பள்ளி பாடுவாளே             (5)