முகப்பு
தொடக்கம்
1321
அரக்கர் ஆவி மாள அன்று
ஆழ் கடல் சூழ் இலங்கை செற்ற
குரக்கரசன் என்றும் கோல
வில்லி என்றும் மா மதியை
நெருக்கும் மாடம் நீடு நாங்கை
நின்மலன்-தான் என்று என்று ஓதி
பரக்கழிந்தாள் என் மடந்தை
பார்த்தன்பள்ளி பாடுவாளே (5)