1322ஞாலம் முற்றும் உண்டு உமிழ்ந்த
      நாதன் என்றும் நானிலம் சூழ்
வேலை அன்ன கோல மேனி
      வண்ணன் என்றும் மேல் எழுந்து
சேல் உகளும் வயல் கொள் நாங்கைத்
      தேவ-தேவன் என்று என்று ஓதி
பாலின் நல்ல மென்-மொழியாள்
      பார்த்தன்பள்ளி பாடுவாளே             (6)