முகப்பு
தொடக்கம்
1322
ஞாலம் முற்றும் உண்டு உமிழ்ந்த
நாதன் என்றும் நானிலம் சூழ்
வேலை அன்ன கோல மேனி
வண்ணன் என்றும் மேல் எழுந்து
சேல் உகளும் வயல் கொள் நாங்கைத்
தேவ-தேவன் என்று என்று ஓதி
பாலின் நல்ல மென்-மொழியாள்
பார்த்தன்பள்ளி பாடுவாளே (6)