முகப்பு
தொடக்கம்
1323
நாடி என்-தன் உள்ளம் கொண்ட
நாதன் என்றும் நான்மறைகள்
தேடி என்றும் காண மாட்டாச்
செல்வன் என்றும் சிறை கொள் வண்டு
சேடு உலவு பொழில் கொள்
நாங்கைத் தேவ-தேவன் என்று என்று ஓதி
பாடகம் சேர் மெல்-அடியாள்
பார்த்தன்பள்ளி பாடுவாளே (7)