1323நாடி என்-தன் உள்ளம் கொண்ட
      நாதன் என்றும் நான்மறைகள்
தேடி என்றும் காண மாட்டாச்
      செல்வன் என்றும் சிறை கொள் வண்டு
சேடு உலவு பொழில் கொள்
      நாங்கைத் தேவ-தேவன் என்று என்று ஓதி
பாடகம் சேர் மெல்-அடியாள்
      பார்த்தன்பள்ளி பாடுவாளே             (7)