1324உலகம் ஏத்தும் ஒருவன் என்றும்
      ஒண் சுடரோடு உம்பர் எய்தா
நிலவும் ஆழிப் படையன் என்றும்
      நேசன் என்றும் தென் திசைக்குத்
திலதம் அன்ன மறையோர் நாங்கைத்
      தேவ-தேவன் என்று என்று ஓதி
பலரும் ஏச என் மடந்தை
      பார்த்தன்பள்ளி பாடுவாளே             (8)