1325கண்ணன் என்றும் வானவர்கள்
      காதலித்து மலர்கள் தூவும்
எண்ணன் என்றும் இன்பன் என்றும்
      ஏழ் உலகுக்கு ஆதி என்றும்
திண்ண மாடம் நீடு நாங்கைத்
      தேவ-தேவன் என்று என்று ஓதி
பண்ணின் அன்ன மென்-மொழியாள்
      பார்த்தன்பள்ளி பாடுவாளே             (9)