133பெண்டிர் வாழ்வார் நின் ஒப்பாரைப்
      பெறுதும் என்னும் ஆசையாலே
கண்டவர்கள் போக்கு ஒழிந்தார்
      கண்ணிணையால் கலக்க நோக்கி
வண்டு உலாம் பூங்குழலினார் உன்
      வாயமுதம் உண்ண வேண்டிக்
கொண்டு போவான் வந்து நின்றார்
      கோவிந்தா நீ முலை உணாயே            (7)