1338 | ஆநிரை மேய்த்து அன்று அலை கடல் அடைத்திட்டு அரக்கர்-தம் சிரங்களை உருட்டி கார் நிறை மேகம் கலந்தது ஓர் உருவக் கண்ணனார் கருதிய கோயில்- பூ நிரைச் செருந்தி புன்னை முத்து அரும்பி பொதும்பிடை வரி வண்டு மிண்டி தேன் இரைத்து உண்டு அங்கு இன் இசை முரலும்- திருவெள்ளியங்குடி-அதுவே (2) |
|