134இரு மலை போல் எதிர்ந்த மல்லர்
      இருவர் அங்கம் எரிசெய்தாய் உன்
திரு மலிந்து திகழு மார்வு
      தேக்க வந்து என் அல்குல் ஏறி
ஒரு முலையை வாய்மடுத்து
      ஒரு முலையை நெருடிக்கொண்டு
இரு முலையும் முறை முறையாய்
      ஏங்கி ஏங்கி இருந்து உணாயே             (8)