1340கறவை முன் காத்து கஞ்சனைக் காய்ந்த
      காளமேகத் திரு உருவன்
பறவை முன் உயர்த்து பாற்கடல் துயின்ற
      பரமனார் பள்ளிகொள் கோயில்-
துறைதுறைதோறும் பொன் மணி சிதறும்
      தொகு திரை மண்ணியின் தென்பால்
செறி மணி மாடக் கொடி கதிர் அணவும்-
      திருவெள்ளியங்குடி-அதுவே             (4)