1342 | காற்றிடைப் பூளை கரந்தென அரந்தை உற கடல் அரக்கர்-தம் சேனை கூற்றிடைச் செல்ல கொடுங் கணை துரந்த கோல வில் இராமன்-தன் கோயில்- ஊற்றிடை நின்ற வாழையின் கனிகள் ஊழ்த்து வீழ்ந்தன உண்டு மண்டி சேற்றிடைக் கயல்கள் உகள் திகழ் வயல் சூழ்- திருவெள்ளியங்குடி-அதுவே (6) |
|