1343ஒள்ளிய கருமம் செய்வன் என்று உணர்ந்த
      மாவலி வேள்வியில் புக்கு
தெள்ளிய குறள் ஆய் மூவடி கொண்டு
      திக்கு உற வளர்ந்தவன் கோயில்-
அள்ளி அம் பொழில்வாய் இருந்து வாழ் குயில்கள்
      அரி அரி என்று அவை அழைப்ப
வெள்ளியார் வணங்க விரைந்து அருள்செய்வான்-
      திருவெள்ளியங்குடி-அதுவே             (7)