1344முடி உடை அமரர்க்கு இடர் செய்யும் அசுரர்-
      தம் பெருமானை அன்று அரி ஆய்
மடியிடை வைத்து மார்வம் முன் கீண்ட
      மாயனார் மன்னிய கோயில்-
படியிடை மாடத்து அடியிடைத் தூணில்
      பதித்த பல் மணிகளின் ஒளியால்
விடி பகல் இரவு என்று அறிவு-அரிது ஆய-
      திருவெள்ளியங்குடி-அதுவே             (8)