1345குடி குடி ஆகக் கூடி நின்று அமரர்
      குணங்களே பிதற்றி நின்று ஏத்த
அடியவர்க்கு அருளி அரவு-அணைத் துயின்ற
      ஆழியான் அமர்ந்து உறை கோயில்-
கடி உடைக் கமலம் அடியிடை மலர
      கரும்பொடு பெருஞ் செந்நெல் அசைய
வடிவு உடை அன்னம் பெடையொடும் சேரும்
      வயல்-வெள்ளியங்குடி-அதுவே             (9)