1346பண்டு முன் ஏனம் ஆகி அன்று ஒருகால்
      பார் இடந்து எயிற்றினில் கொண்டு
தெண் திரை வருடப் பாற்கடல் துயின்ற
      திருவெள்ளியங்குடியானை
வண்டு அறை சோலை மங்கையர் தலைவன்
      மான வேல் கலியன் வாய் ஒலிகள்
கொண்டு இவை பாடும் தவம் உடையார்கள்
      ஆள்வர்-இக் குரை கடல் உலகே             (10)