முகப்பு
தொடக்கம்
1346
பண்டு முன் ஏனம் ஆகி அன்று ஒருகால்
பார் இடந்து எயிற்றினில் கொண்டு
தெண் திரை வருடப் பாற்கடல் துயின்ற
திருவெள்ளியங்குடியானை
வண்டு அறை சோலை மங்கையர் தலைவன்
மான வேல் கலியன் வாய் ஒலிகள்
கொண்டு இவை பாடும் தவம் உடையார்கள்
ஆள்வர்-இக் குரை கடல் உலகே (10)