1347அறிவது அறியான் அனைத்து உலகும்
      உடையான் என்னை ஆள் உடையான்
குறிய மாணி உரு ஆய
      கூத்தன் மன்னி அமரும் இடம்-
நறிய மலர்மேல் சுரும்பு ஆர்க்க
      எழில் ஆர் மஞ்ஞை நடம் ஆட
பொறி கொள் சிறை வண்டு இசை பாடும்-
      புள்ளம்பூதங்குடி-தானே             (1)