1349மேவா அரக்கர் தென் இலங்கை
      வேந்தன் வீயச் சரம் துரந்து
மா வாய் பிளந்து மல் அடர்த்து
      மருதம் சாய்த்த மாலது இடம்-
கா ஆர் தெங்கின் பழம் வீழ
      கயல்கள் பாய குருகு இரியும்
பூ ஆர் கழனி எழில் ஆரும்-
      புள்ளம்பூதங்குடி-தானே             (3)