1353குடையா விலங்கல் கொண்டு ஏந்தி
      மாரி பழுதா நிரை காத்து
சடையான் ஓட அடல் வாணன்
      தடந் தோள் துணித்த தலைவன் இடம்-
குடியா வண்டு கள் உண்ண
      கோல நீலம் மட்டு உகுக்கும
புடை ஆர் கழனி எழில் ஆரும்-
      புள்ளம்பூதங்குடி-தானே             (7)