1354கறை ஆர் நெடு வேல் மற மன்னர்
      வீய விசயன் தேர் கடவி
இறையான் கையில் நிறையாத
      முண்டம் நிறைத்த எந்தை இடம்-
மறையால் முத்தீ-அவை வளர்க்கும்
      மன்னு புகழால் வண்மையால்
பொறையால் மிக்க அந்தணர் வாழ்-
      புள்ளம்பூதங்குடி-தானே             (8)