1355துன்னி மண்ணும் விண் நாடும்
      தோன்றாது இருள் ஆய் மூடிய நாள்
அன்னம் ஆகி அரு மறைகள்
      அருளிச்செய்த அமலன் இடம்-
மின்னு சோதி நவமணியும்
      வேயின் முத்தும் சாமரையும்
பொன்னும் பொன்னி கொணர்ந்து அலைக்கும்-
      புள்ளம்பூதங்குடி-தானே            (9)