முகப்பு
தொடக்கம்
1355
துன்னி மண்ணும் விண் நாடும்
தோன்றாது இருள் ஆய் மூடிய நாள்
அன்னம் ஆகி அரு மறைகள்
அருளிச்செய்த அமலன் இடம்-
மின்னு சோதி நவமணியும்
வேயின் முத்தும் சாமரையும்
பொன்னும் பொன்னி கொணர்ந்து அலைக்கும்-
புள்ளம்பூதங்குடி-தானே (9)