1368வசை இல் நான்மறை கெடுத்த அம் மலர் அயற்கு
      அருளி முன் பரி முகமாய்
இசை கொள் வேத-நூல் என்று இவை பயந்தவ
      னே!-எனக்கு அருள்புரியே-
உயர் கொள் மாதவிப் போதொடு உலாவிய
      மாருதம் வீதியின்வாய
திசை எலாம் கமழும் பொழில் சூழ் திரு
      வெள்ளறை நின்றானே             (2)