1372பொங்கு நீள் முடி அமரர்கள் தொழுது எழ
      அமுதினைக் கொடுத்தளிப்பான்
அங்கு ஓர் ஆமை-அது ஆகிய ஆதி!-நின்
      அடிமையை அருள் எனக்கு-
தங்கு பேடையோடு ஊடிய மதுகரம்
      தையலார் குழல் அணைவான்
திங்கள் தோய் சென்னி மாடம் சென்று அணை திரு
      வெள்ளறை நின்றானே (6)