1374முன் இவ் ஏழ் உலகு உணர்வு இன்றி இருள் மிக
      உம்பர்கள் தொழுது ஏத்த
அன்னம் ஆகி அன்று அரு மறை பயந்தவ
      னே!-எனக்கு அருள்புரியே-
மன்னு கேதகை சூதகம் என்று இவை
      வனத்திடைச் சுரும்பு இனங்கள்
தென்ன என்ன வண்டு இன் இசை முரல் திரு
      வெள்ளறை நின்றானே            (8)