முகப்பு
தொடக்கம்
1374
முன் இவ் ஏழ் உலகு உணர்வு இன்றி இருள் மிக
உம்பர்கள் தொழுது ஏத்த
அன்னம் ஆகி அன்று அரு மறை பயந்தவ
னே!-எனக்கு அருள்புரியே-
மன்னு கேதகை சூதகம் என்று இவை
வனத்திடைச் சுரும்பு இனங்கள்
தென்ன என்ன வண்டு இன் இசை முரல் திரு
வெள்ளறை நின்றானே (8)