1375ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று
      அகல்-இடம் முழுதினையும்
பாங்கினால் கொண்ட பரம!-நின் பணிந்து எழு
      வேன் எனக்கு அருள்புரியே-
ஓங்கு பிண்டியின் செம் மலர் ஏறி வண்டு
      உழிதர மா ஏறித்
தீம் குயில் மிழற்றும் படப்பைத் திரு
      வெள்ளறை நின்றானே             (9)