முகப்பு
தொடக்கம்
1375
ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று
அகல்-இடம் முழுதினையும்
பாங்கினால் கொண்ட பரம!-நின் பணிந்து எழு
வேன் எனக்கு அருள்புரியே-
ஓங்கு பிண்டியின் செம் மலர் ஏறி வண்டு
உழிதர மா ஏறித்
தீம் குயில் மிழற்றும் படப்பைத் திரு
வெள்ளறை நின்றானே (9)