139வண்ணப் பவளம் மருங்கினிற் சாத்தி
      மலர்ப்பாதக் கிண்கிணி ஆர்ப்ப
நண்ணித் தொழும் அவர் சிந்தை பிரியாத
      நாராயணா இங்கே வாராய்
எண்ணற்கு அரிய பிரானே திரியை
      எரியாமே காதுக்கு இடுவன்
கண்ணுக்கு நன்றும் அழகும் உடைய
      கனகக் கடிப்பும் இவையாம்             (2)