முகப்பு
தொடக்கம்
1390
தாய் வாயில் சொல் கேளாள் தன் ஆயத்
தோடு அணையாள் தட மென் கொங்கை-
யே ஆரச் சாந்து அணியாள் எம் பெருமான்
திருவரங்கம் எங்கே? என்னும்-
பேய் மாய முலை உண்டு இவ் உலகு உண்ட
பெரு வயிற்றன் பேசில் நங்காய்
மா மாயன் என் மகளைச் செய்தனகள்
மங்கைமீர் மதிக்கிலேனே (4)