1391பூண் முலைமேல் சாந்து அணியாள் பொரு கயல் கண்
      மை எழுதாள் பூவை பேணாள
் ஏண் அறியாள் எத்தனையும் எம் பெருமான்
      திருவரங்கம் எங்கே? என்னும்-
நாள் மலராள் நாயகன் ஆய் நாம் அறிய
      ஆய்ப்பாடி வளர்ந்த நம்பி
ஆண் மகன் ஆய் என் மகளைச் செய்தனகள்
      அம்மனைமீர்             (5)