1395பந்தோடு கழல் மருவாள் பைங் கிளியும்
      பால் ஊட்டாள் பாவை பேணாள்
வந்தானோ திருவரங்கன்? வாரானோ?
      என்று என்றே வளையும் சோரும்-
சந்தோகன் பௌழியன் ஐந் தழல் ஓம்பு
      தைத்திரியன் சாமவேதி
அந்தோ வந்து என் மகளைச் செய்தனகள்
      அம்மனைமீர் அறிகிலேனே (9)