1396சேல் உகளும் வயல் புடை சூழ் திருவரங்கத்து
      அம்மானைச் சிந்தைசெய்த
நீல மலர்க் கண் மடவாள் நிறை அழிவைத்
      தாய் மொழிந்த-அதனை நேரார்
கால வேல் பரகாலன் கலிகன்றி
      ஒலி மாலை கற்று வல்லார்
மாலை சேர் வெண் குடைக்கீழ் மன்னவர் ஆய்
      பொன்-உலகில் வாழ்வர்-தாமே             (10)