1415 | பேயினார் முலை ஊண் பிள்ளை ஆய் ஒருகால் பெரு நிலம் விழுங்கி அது உமிழ்ந்த வாயன் ஆய் மால் ஆய் ஆல் இலை வளர்ந்து மணி முடி வானவர்-தமக்குச சேயன் ஆய் அடியோர்க்கு அணியன் ஆய் வந்து என் சிந்தையுள் வெம் துயர் அறுக்கும் ஆயன் ஆய் அன்று குன்றம் ஒன்று எடுத்தான் -அரங்க மா நகர் அமர்ந்தானே (9) |
|