1421மாகம் மா நிலம் முழுதும் வந்து இறைஞ்சும்
      மலர் அடி கண்ட மா மறையாளன்
தோகை மா மயில் அன்னவர் இன்பம்
      துற்றிலாமையில் அத்த இங்கு ஒழிந்து
போகம் நீ எய்தி பின்னும் நம் இடைக்கே
      போதுவாய் என்ற பொன் அருள் எனக்கும
ஆக வேண்டும் என்று அடி-இணை அடைந்தேன்
      -அணி பொழில் திருவரங்கத்து அம்மானே             (5)