1421 | மாகம் மா நிலம் முழுதும் வந்து இறைஞ்சும் மலர் அடி கண்ட மா மறையாளன் தோகை மா மயில் அன்னவர் இன்பம் துற்றிலாமையில் அத்த இங்கு ஒழிந்து போகம் நீ எய்தி பின்னும் நம் இடைக்கே போதுவாய் என்ற பொன் அருள் எனக்கும ஆக வேண்டும் என்று அடி-இணை அடைந்தேன் -அணி பொழில் திருவரங்கத்து அம்மானே (5) |
|