1440பிறையின் ஒளி எயிறு இலக முறுகி எதிர் பொருதும் என
      வந்த அசுரர்
இறைகள்-அவை-நெறு-நெறு என வெறிய-அவர் வயிறு அழல
      நின்ற பெருமான்
சிறை கொள் மயில் குயில் பயில மலர்கள் உக அளி முரல
      அடிகொள் நெடு மா
நறைசெய் பொழில் மழை தவழும் நந்திபுரவிண்ணகரம்-
      நண்ணு மனமே             (4)