1441மூள எரி சிந்தி முனிவு எய்தி அமர் செய்தும் என
      வந்த அசுரர்
தோளும் அவர் தாளும் முடியோடு பொடி ஆக நொடி
      ஆம் அளவு எய்தான்
வாளும் வரி வில்லும் வளை ஆழி கதை சங்கம் இவை
      அம்கை உடையான்
நாளும் உறைகின்ற நகர் நந்திபுரவிண்ணகரம்-
      நண்ணு மனமே             (5)