147காரிகையார்க்கும் உனக்கும் இழுக்கு உற்று என்
      காதுகள் வீங்கி எரியில்?
தாரியா தாகில் தலை நொந்திடும் என்று
      விட்டிட்டேன் குற்றமே அன்றே?
சேரியிற் பிள்ளைகள் எல்லாரும் காது
      பெருக்கித் திரியவும் காண்டி
ஏர் விடை செற்று இளங்கன்று எறிந்திட்ட
      இருடிகேசா என்தன் கண்ணே <10>