முகப்பு
தொடக்கம்
1509
தெள் ஆர் கடல்வாய் விட வாயச்
சின வாள் அரவில் துயில் அமர்ந்து
துள்ளா வரு மான் விழ வாளி
துரந்தான் இரந்தான் மாவலி மண்-
புள் ஆர் புறவில் பூங் காவி
பொலன் கொள் மாதர் கண் காட்ட
நள் ஆர் கமலம் முகம் காட்டும்
நறையூர் நின்ற நம்பியே (3)