1512வள்ளி கொழுநன் முதலாய
      மக்களோடு முக்கணான்
வெள்கி ஓட விறல் வாணன்
      வியன் தோள் வனத்தைத் துணித்து உகந்தான்-
பள்ளி கமலத்திடைப் பட்ட
      பகு வாய் அலவன் முகம் நோக்கி
நள்ளி ஊடும் வயல் சூழ்ந்த
      நறையூர் நின்ற நம்பியே             (6)