முகப்பு
தொடக்கம்
1512
வள்ளி கொழுநன் முதலாய
மக்களோடு முக்கணான்
வெள்கி ஓட விறல் வாணன்
வியன் தோள் வனத்தைத் துணித்து உகந்தான்-
பள்ளி கமலத்திடைப் பட்ட
பகு வாய் அலவன் முகம் நோக்கி
நள்ளி ஊடும் வயல் சூழ்ந்த
நறையூர் நின்ற நம்பியே (6)