1513மிடையா வந்த வேல் மன்னர்
      வீய விசயன் தேர் கடவி
குடையா வரை ஒன்று எடுத்து ஆயர்
      -கோ ஆய் நின்றான் கூர் ஆழிப்
படையான்-வேதம் நான்கு ஐந்து
      வேள்வி அங்கம் ஆறு இசை ஏழ்
நடையா வல்ல அந்தணர் வாழ்
      நறையூர் நின்ற நம்பியே             (7)