1514பந்து ஆர் விரலாள் பாஞ்சாலி
      கூந்தல் முடிக்க பாரதத்து
கந்து ஆர் களிற்றுக் கழல் மன்னர்
      கலங்க சங்கம் வாய் வைத்தான்-
செந்தாமரைமேல் அயனோடு
      சிவனும் அனைய பெருமையோர்
நந்தா வண் கை மறையோர் வாழ்
      நறையூர் நின்ற நம்பியே             (8)