முகப்பு
தொடக்கம்
1515
ஆறும் பிறையும் அரவமும்
அடம்பும் சடைமேல் அணிந்து உடலம்
நீறும் பூசி ஏறு ஊரும்
இறையோன் சென்று குறை இரப்ப
மாறு ஒன்று இல்லா வாச நீர்
வரை மார்வு அகலத்து அளித்து உகந்தான்-
நாறும் பொழில் சூழ்ந்து அழகு ஆய
நறையூர் நின்ற நம்பியே (9)