1528கழி ஆரும் கன சங்கம் கலந்து எங்கும் நிறைந்து ஏறி
வழி ஆர முத்து ஈன்று வளம் கொடுக்கும் திருநறையூர்-
பழி ஆரும் விறல் அரக்கன் பரு முடிகள்-அவை சிதற
அழல் ஆரும் சரம் துரந்தான் அடி-இணையே அடை நெஞ்சே             (2)