1533சீர் தழைத்த கதிர்ச் செந்நெல் செங் கமலத்து இடை இடையில்
பார் தழைத்துக் கரும்பு ஓங்கிப் பயன் விளைக்கும் திருநறையூர்-
கார் தழைத்த திரு உருவன் கண்ண-பிரான் விண்ணவர்-கோன்
தார் தழைத்த துழாய் முடியன் தளிர் அடியே அடை நெஞ்சே             (7)