154கஞ்சன் புணர்ப்பினில் வந்த
      கடிய சகடம் உதைத்து
வஞ்சகப் பேய்மகள் துஞ்ச
      வாய் முலை வைத்த பிரானே
மஞ்சளும் செங்கழுநீரின்
      வாசிகையும் நறுஞ்சாந்தும்
அஞ்சனமும் கொண்டு வைத்தேன்
      அழகனே நீராட வாராய்             (4)