1568 | தாய் நினைந்த கன்றே ஒக்க என்னையும் தன்னையே நினைக்கச் செய்து தான் எனக்கு ஆய் நினைந்து அருள் செய்யும் அப்பனை அன்று இவ் வையகம் உண்டு உமிழ்ந்திட்ட வாயனை மகரக் குழைக் காதனை மைந்தனை மதிள் கோவல் இடைகழி ஆயனை அமரர்க்கு அரி ஏற்றை என் அன்பனை அன்றி ஆதரியேனே (2) |
|