157கறந்த நற்பாலும் தயிரும்
      கடைந்து உறிமேல் வைத்த வெண்ணெய்
பிறந்ததுவே முதலாகப்
      பெற்றறியேன் எம்பிரானே
சிறந்த நற்றாய் அலர் தூற்றும்
      என்பதனால் பிறர் முன்னே
மறந்தும் உரையாட மாட்டேன்
      மஞ்சனம் ஆட நீ வாராய்             (7)