1571 | ஆங்கு வெம் நரகத்து அழுந்தும்போது அஞ்சேல் என்று அடியேனை அங்கே வந்து தாங்கு தாமரை அன்ன பொன் ஆர் அடி எம்பிரானை உம்பர்க்கு அணி ஆய் நின்ற வேங்கடத்து அரியை பரி கீறியை வெண்ணெய் உண்டு உரலினிடை ஆப்புண்ட தீங் கரும்பினை தேனை நன் பாலினை அன்றி என் மனம் சிந்தை செய்யாதே (5) |
|