1574இனி எப் பாவம் வந்து எய்தும் சொல்லீர் எமக்கு-
      இம்மையே அருள்பெற்றமையால் அடும்
துனியைத் தீர்த்து இன்பமே தருகின்றது ஓர்
      தோற்றத் தொல் நெறியை வையம் தொழப்படும்
முனியை வானவரால் வணங்கப்படும்
      முத்தினை பத்தர்-தாம் நுகர்கின்றது ஓர்
கனியை காதல் செய்து என் உள்ளம் கொண்ட
      கள்வனை-இன்று கண்டுகொண்டேனே             (8)