1577கண் சோர வெம் குருதி வந்து இழிய
      வெம் தழல்போல் கூந்தலாளை
மண் சேர முலை உண்ட மா மதலாய்
      வானவர்-தம் கோவே என்று
விண் சேரும் இளந் திங்கள் அகடு உரிஞ்சு
      மணி மாடம் மல்கு செல்வத்
தண் சேறை எம் பெருமான் தாள் தொழுவார்
      காண்மின்-என் தலைமேலாரே            (1)