1578 | அம் புருவ வரி நெடுங் கண் அலர்-மகளை வரை அகலத்து அமர்ந்து மல்லல் கொம்பு உருவ விளங்கனிமேல் இளங் கன்று கொண்டு எறிந்த கூத்தர் போலாம் வம்பு அலரும் தண் சோலை வண் சேறை வான் உந்து கோயில் மேய எம் பெருமான் தாள் தொழுவார் எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றாரே (2) |
|